சென்னை: 2047-ல் இந்தியாவை வல்லரசு ஆக்குவோம் என்று மீண்டும் ஒருமுறை அல்வா கிண்டியுள்ளார்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். “வேலைவாய்ப்பை பெருக்கவோ, பணவீக்கத்தை கட்டுப்படுத்தவோ எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை, மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்கவும் எந்த திட்டங்களையும் பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை, ஒவ்வொரு ஆண்டும் இந்தியா வல்லரசாவதற்கான இலக்கை தள்ளி வைத்துக் கொண்டே போவது மட்டும்தான் பாசிஸ்ட்டுகளின் சாதனை” என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.