டெல்லி: இந்தியாவில் 23 நாய் இனங்களை விற்கவோ, இறக்குமதி செய்யவோ விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான வழக்கில் ஒன்றிய அரசு பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த 23 நாய் இனங்கள் தற்போது இந்தியாவில் வளர்க்கப்பட்டு வந்தால் கருத்தடை செய்ய வேண்டும் எனவும் ஒன்றிய அரசு உத்தரவிட்டிருந்தது. அரசின் உத்தரவு கருணைக் கொலைக்கு ஈடானது என டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.