டெல்லி: நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பிரதமர் பேசவுள்ள நிலையில் மக்களவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் மக்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். மக்களவையில் காங்கிரஸின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேச அனுமதி மறுக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர்.