பெங்களூரு: இந்தியா என்ற பெயரை மம்தா முன்மொழிந்தார், மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி வழிமொழிந்தனர் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். சிதறிப் போன தேசிய ஜனநாயக கூட்டணியை மீண்டும் ஒன்றிணைக்க முயற்சி செய்கின்றனர். அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற துறைகளை வைத்து ஒன்றிய அரசு அச்சுறுத்த நினைக்கிறது. சட்டத்தை நாடாளுமன்றத்துக்கு கொண்டு வந்தால் அனைவரும் இணைந்து எதிர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.