தஞ்சாவூர்: டெல்டா மாவட்ட குறுவை நெல் சாகுபடிக்காக கல்லணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் வழியாக 2,250 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. 1,600 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது திறக்கப்படும் நீரின் அளவு 2,250 கன அடியாக அதிகரித்துள்ளது.