ஒசூரில் கல்குவாரி உரிமையாளர் வீட்டில் 34 மணி நேரமாக நடைபெற்று வந்த வருமானவரித்துறை சோதனை நிறைவு பெற்றது. ஒசூரில் ஜல்லி கிரசர் உரிமையாளர் லோகேஷ் குமார் என்பவர் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியது. சோதனையில் ரூ.1.20 கோடி ரொக்கம், 175 சவரன் நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் சோதனையில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.