வருமான வரி சோதனை பற்றி கவலையில்லை: ஆர்.எஸ்.பாரதி
வருமான வரி சோதனை பற்றி கவலையில்லை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை திசை திருப்புவதற்காகவே சோதனை நடைபெறுவதாக குற்றசாட்டு. செந்தில் பாலாஜியை முடக்க வேண்டும் என்பதற்காகவே வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது.
பாஜகவின் தரம் தாழ்ந்த அரசியலையே இது காட்டுகிறது. எத்தனை ரெய்டுகள் வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளட்டும், அதைப்பற்றி கவலை இல்லை. காவல்துறைக்கு தெரிவிக்காமல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதற்கு அவர் எதிர்ப்பு . முதலமைச்சரின் முயற்சிகள் மக்கள் மத்தியில் நல்ல விதமாக சென்றடையும் நிலையில் பாஜக இது போன்ற செயலில் ஈடுபடுகிறது.
சிபிஐ மூலம் எதிர்க்கட்சிகளுக்கு பாஜக மிரட்டல்
சிபிஐ விசாரணை மூலம் எதிர்கட்சிகளை பாஜக மிரட்டுகிறது. அனுமன் பெயரை சொல்லி கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க முயன்ற பிரதமரின் முயற்சி தோல்வி. கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக தோற்றது குறித்து ஆர்.எஸ்.பாரதி விமர்சனம். கர்நாடக தேர்தலில் பாஜகவினர் ரூ.2,000 நோட்டுகளைத்தான் விநியோகித்துள்ளது குறித்து ஆதாரம் கிடைத்துள்ளது. கர்நாடக சட்டமன்ற தேர்தல் தோல்வி பாஜகவிற்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக தேர்தல் முடிவு நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
தரம் தாழ்ந்த அரசியல் செய்கிறது பாஜக
வருமானவரி சோதனை என்பது பாஜகவின் தரம் தாழ்ந்த அரசியலையே காட்டுகிறது. திட்டமிட்டு சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகின்றனர். இவ்வாறு தெரிவித்தார்.