நெல்லை மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடுகிறார். நெல்லை கிழக்கு மாவட்ட திமுக அலுவலகம், பாளையங்கோட்டை மகாராஜநகரில் அமைந்துள்ளது. அங்கு நேற்று மாலை 9 பேர் கொண்ட குழு வருமான வரித்துறை அதிகாரிகள் வந்து திடீர் சோதனை நடத்தினர். மாவட்ட செயலாளர் ஆவுடையப்பனிடம் விசாரணை நடத்தினர். சுமார் 3 மணி நேர சோதனைக்கு பின்னர் வருமான வரித்துறையினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அப்போது அங்கு திரண்ட கட்சியினர் ஒன்றிய அரசிற்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.