மதுரை: ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் யாதவுக்கு விதிக்கப்பட்ட 2 வார சிறை தண்டனையை ஐகோர்ட் மதுரை கிளை நிறுத்தி வைத்தது. தனி நீதிபதி விதித்த சிறை தண்டனையை எதிர்த்து அரசு தரப்பில் 2 நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதிமுக ஆட்சியின்போது கோர்ட் உத்தரவை நிறைவேற்றாத
அப்போதைய கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவுக்கு 2 வாரம் சிறை விதிக்கப்பட்டது. கல்வித்துறை சார்ந்த பணப்பலன் கோரி நெல்லையை சேர்ந்த ஞானப்பிரகாசம் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.