Friday, May 17, 2024
Home » கணவர் மாயம், கடன் தொல்லையால் விரக்தி கோவையில் ரயில் முன் பாய்ந்து தாய், மகன், மகள் தற்கொலை: சென்னையை சேந்தவர்கள்

கணவர் மாயம், கடன் தொல்லையால் விரக்தி கோவையில் ரயில் முன் பாய்ந்து தாய், மகன், மகள் தற்கொலை: சென்னையை சேந்தவர்கள்

by Karthik Yash

கோவை: கணவர் மாயமானதாலும், கடன் தொல்லையாலும் விரக்தியடைந்த தாய், மகன், மகளுடன் ரயில் முன் பாய்ந்த தற்கொலை செய்துகொண்டார். சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (50). எலக்ட்ரீசியன். இவரது மனைவி லட்சுமி (45). இவர்களது மகன் யுவராஜ் (16)11-ம் வகுப்பும், ஜனனி (14) 10-ம் வகுப்பும் படித்து வந்தனர். தட்சிணாமூர்த்தி கடன் வாங்கி இருந்தார். ஆனால் அந்த கடனை அவரால் செலுத்த முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுக்கவே கடந்த 28ம் தேதி தட்சிணாமூர்த்தி வீட்டைவிட்டு வெளியேறினார். மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து கணவரை கண்டுபிடித்து தரும்படி துரைப்பாக்கம் போலீசில் லட்சுமி அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கணவர் வீட்டைவிட்டு சென்றதால் மன வேதனையில் இருந்த வரலட்சுமி, தனது மகனையும், மகளையும் அழைத்து கொண்டு கடந்த 29ம் தேதி அருகே உள்ள கோயிலுக்கு செல்வதாக தனது தாயாரிடம் கூறிவிட்டு புறப்பட்டார். அதன்பின்பு அவர்கள் வீடு திரும்பவில்லை. வரலட்சுமியின் தாயார் 3 பேரை தேடியும் கிடைக்கவில்லை. இந்தநிலையில்தான் நேற்று முன்திம் கோவை நஞ்சுண்டாபுரம் ரயில்வே தண்டவாளத்தில் ஒரு பெண் உள்பட 3 பேரின் உடல்கள் கிடப்பதும், அவர்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ததும் தெரியவந்தது.

கோவை ரயில்வே போலீசார் அந்த உடல்களை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது இறந்தவர்கள்சென்னையில் மாயமான வரலட்சுமி, யுவராஜ், ஜனனி என்பது தெரியவந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் வீட்டைவிட்டு வெளியேறிய வரலட்சுமி கோவைக்கு வந்து, போத்தனூர் பகுதியில் மகன், மகளுடன் திரிந்துள்ளார். கடன் தொல்லையாலும், கணவர் வீட்டை விட்டு வெளியேறியதாலும் விரக்தியடைந்த அவர் நஞ்சுண்டாபுரம் ரயில்வே மேம்பாலம் அருகே கேரளா சென்ற ரயிலில் தனது மகன், மகளுடன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து சென்னையில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து 3 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

five × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi