சாத்தான்குளம்: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் மாணிக்கவாசபுரம் தெருவைச் சேர்ந்தவர் எட்வர்ட் ராஜதுரை (47). முன்னாள் பேரூராட்சி கவுன்சிலரான இவர், பாஜ சிறுபான்மை அணி முன்னாள் மாவட்ட செயலாளராக இருந்தவர். தற்போது பாஜவில் பொறுப்பு இல்லாமல் இருந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி எம்பியை அவதூறாக சித்தரித்தும், அவரது குடும்பத்தினரை அவதூறாக பேசியும் வாட்ஸ் அப் குழுவில் ஆடியோ பதிவிட்டு உள்ளார். இதுகுறித்து புகாரின்பேரில் சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் எட்வர்ட் ராஜதுரையை நேற்று கைது செய்தனர். இதேபோல், உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாக ஆடியோ வெளியிட்டது தொடர்பாக அவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.