விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் பகுதியில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இதுவரை தோண்டப்பட்ட 15 குழிகளில் சுடுமண்ணால் ஆன பொம்மை, புகைப்பிடிப்பான் கருவி உள்ளிட்ட 3,050க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் தோண்டப்பட்ட குழியில், சுடுமண்ணால் ஆன பந்து கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் கூறுகையில், ‘‘இந்த மண் பந்துகள் கவட்டையில் வைத்து மிருகங்களை வேட்டையாடுவதற்கும், விளையாடுவதற்கும் முன்னோர்கள் பயன்படுத்தி இருக்கலாம்’’ என்றார்.
வேட்டைக்கு பயன்படுத்திய சுடுமண் பந்து கண்டெடுப்பு
previous post