மதுரை: பெண் போலீசிடம் தகராறு செய்ததாக கைது செய்யயப்பட்ட இந்து முன்னணி பிரமுகருக்கு ஜாமின் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட இந்து பிரமுகர் குபேந்திரன் உட்பட 3 பேர் ஜாமின் வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தொடர்ந்திருந்தனர். தஞ்சை ஆஞ்சநேயர் கோயில் முன் அமர்ந்து மது அருந்தியதை தட்டிக் கேட்ட பெண் போலீசிடம் தகாத முறையில் நடந்ததாக புகார் எழுந்துள்ளது.