புதுடெல்லி: தமிழ் புத்தாண்டு இன்று கொண்டாடப்படும் நிலையில், பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ‘இந்திய கலாசார மற்றும் பன்முகத்தன்மை ஆகின நம்மை மேலும் பலப்படுத்துகிறது. தனித்துவமான பாரம்பரிய அம்சங்களை மக்கள் கொண்டாடி வருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது’ எனக்கூறி நேற்று டெல்லியில் நடந்த தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற புகைப்படங்களை பதவிட்டுள்ளார்.
மேலும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘தொன்மையும் பெருமையும் உடைய தமிழ் கலாசாரமும் பாரம்பரியமும் நம் பெருமையாகும். புத்தாண்டு கொண்டாட்டம் இந்த பெருமையை வலுப்படுத்துவதோடு, உலகெங்கிலுமுள்ள தமிழ் சகோதர சகோதரிகளுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்புக்கான கதவுகள் திறக்கட்டும். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார்.