சென்னை: குட்கா விற்பனை தொடர்பாக ஆவடி கடைவீதியில் மாநகர காவல் ஆணையர் சங்கர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். பாடி, கொரட்டூர், அம்பத்தூர், முகப்பேர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் குட்கா பொருட்கள் பற்றி ஆணையர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியில் பெட்டிக் கடைகளில் குட்கா விற்பதாக புகார் எழுந்துள்ளது.