நீலகிரி: கூடலூர் அருகே முகாமிட்டுள்ள 22 காட்டு யானைகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஏலியஸ் கடை புல்மேட்டில் ஒரு வாரமாக 15 யானைகள் முகாமிட்டுள்ளன. வனத்துறையினர் குழுக்கள் அமைத்து இரவு பகலாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கவனத்துடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.