Friday, May 24, 2024
Home » குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.90 லட்சம் மதிப்பீட்டில் நவீன செயற்கை கால்கள்: கலெக்டர் வழங்கினார்

குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.90 லட்சம் மதிப்பீட்டில் நவீன செயற்கை கால்கள்: கலெக்டர் வழங்கினார்

by Dhanush Kumar

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு, ரூ.1.90 லட்சம் மதிப்பீட்டில் நவீன செயற்கை கால்களை கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மையம் கூட்டரங்கில், கலைச்செல்வி மோகன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்களிடம் இருந்து 514 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு, ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்து 800 மதிப்பிலான நவீன செயற்கை கால்களை கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

5 × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi