சென்னை; தமிழ்நாட்டில் 6 மருத்துவக்கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது என்பது தவறான தகவல் என மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி பெரம்பலூர், அரக்கோணம், ராணிப்பேட்டையில் அனுமதி என தகவல் பரவியது. இதுவரை தேசிய மருத்துவ ஆணையத்திடம் அனுமதி கேட்டுக் கூட விண்ணப்பிக்கவில்லை என தமிழ்நாடு மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. மருத்துவக் கல்லூரிகளுக்கான பணியாளர்கள் எவ்வளவு தேவைப்படும் என்ற கடிதம்தான் தற்போது வெளியாகியுள்ளது என்றும் விளக்கம் அளித்துள்ளது.