கோவை: அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு ஏசி வசதியுடன் கூடிய ஓய்வறைகள் தொடங்கப்பட்டுள்ளது. கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் மண்டலங்களின் 7 பணிமனைகளில் ஒய்வறைகள் தொடங்கி வைக்கப்பட்டது. கோவையில் முதற்கட்டமாக 65 பேருந்துகளுக்கு தானியங்கி அறிவிப்பான் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி, சிவசங்கர் கலந்து கொண்டு திட்டங்களை தொடங்கி வைத்தனர்.