திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், முல்லை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார்(27), அருள்குமார்(24) நேற்று ஒரே பைக்கில் யோகா பயிற்சிக்கு சென்றுகொண்டிருந்தனர். குரிசிலாப்பட்டு அருகே உள்ள காவாபட்டறை பகுதியில் சென்றபோது முன்னால் சென்றுகொண்டிருந்த பள்ளி பஸ்சை பைக்கை ஓட்டிய பிரவீன்குமார் முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது திருப்பத்தூரில் இருந்து ஆலங்காயம் நோக்கி வந்த அரசு பஸ் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் தலைநசுங்கி பிரவீன்குமாரும், அருண்குமாரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
அரசு பஸ்- பைக் மோதி 2 பேர் பலி
previous post