புதுடெல்லி: நாடு முழுவதும் யுபிஐ(கூகுள் பே, பேடிஎம், போன் பே உள்ளிட்ட ஆப்கள்) மூலம் பரிவர்த்தனை மற்றும் கட்டணம் செலுத்துதல் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதற்கு எந்த விதமான கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. இந்நிலையில், யுபிஐயை செயல்படுத்தும் என்பிசிஐ சிஇஓ திலீப் அஸ்பே மும்பையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘‘தொலைநோக்கு அடிப்படையில், பெரிய வணிகர்களுக்கு நியாயமான கட்டணம் விதிக்கப்படலாம். இது சிறிய வணிகர்களுக்கு பொருந்தாது. இந்த கட்டண விதிப்பு, அடுத்த 3 ஆண்டுகளில் எப்போது வேண்டுமானாலும் அமலுக்கு வரலாம் என்றார்.
யுபிஐ பேமென்டுக்கு விரைவில் கட்டணம்
previous post