Saturday, July 27, 2024
Home » சி.வி சண்முகம் கோர்ட்டில் ஆஜர்

சி.வி சண்முகம் கோர்ட்டில் ஆஜர்

by Karthik Yash

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு அதிமுக சார்பில் 4 இடங்களில் நடந்த பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் எம்பி, தமிழ்நாடு அரசையும், முதல்வரையும் அவதூறாக பேசியதாவும், புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வுநீதிமன்றத்தில் தனித்தனியாக 4 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று நீதிபதி பூர்ணிமா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.வி சண்முகம் எம்பி நேரில் ஆஜரானார். பழையபேருந்து நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கியதை சி.வி சண்முகம் பெற்றுக்கொண்டார்.

பின்னர் அவரது தரப்பில் வழக்கறிஞர்கள் சீனுவாசன், ராதிகாசெந்தில் உள்ளிட்டவர்கள் ஆஜராகி வாதிட்டனர். அப்போது நாட்டார்மங்கலம், ஆரோவில் பகுதியில் நடந்த அதிமுக நிகழ்ச்சியில் பேசியதாக தொடரப்பட்ட அவதூறு வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட்மனுதாக்கல் செய்துள்ளதாகவும், அதன்தீர்ப்பு வரும்வரை இந்த இருவழக்கிலும் சாட்சிகள் விசாரணை ஒத்திவைக்கவேண்டும் என்று வாதிட்டனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வரும் 18ம் தேதிவழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதேபோல், விழுப்புரம் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சி.வி சண்முகம் எம்பி மீது தொடரப்பட்ட 3 அவதூறு வழக்குகள் விசாரணை மாஜிஸ்திரேட் ராதிகா முன்னிலையில் சி.வி சண்முகம் எம்பி நேரில் ஆஜரானார்.

You may also like

Leave a Comment

17 + eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi