சென்னை : ஆளுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க விலக்கு அளித்துள்ள அரசியல் சாசனப் பிரிவில் திருத்தம் கோரி திமுக மசோதா தாக்கல் செய்துள்ளது. மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன், தனிநபர் மசோதாவை தாக்கல் செய்தார். அரசியல் சாசனத்தில் ஆளுநர்களுக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை நீக்கும் வகையில் பிரிவு 361-ல் திருத்தம் வேண்டும் என்றும் மக்கள் தொகை அடிப்படையில் ஓபிசி இடஒதுக்கீட்டை 27%-ல் இருந்து உயர்த்தி வழங்க ஏதுவாக திருத்தம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர்கள் மீது நடவடிக்கை : திமுக தனி நபர் மசோதா தாக்கல்
previous post