சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென 3 நாள் பயணமாக டெல்லி சென்றார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, நேற்று காலை 6.50 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் ஆளுநரின் செயலாளர், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் சென்றனர். ஆளுநரின் இந்த திடீர் டெல்லி பயணத்தின் நோக்கம், அவருடைய சொந்த பயணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள ஆளுநர், பயணத்தை முடித்துவிட்டு நாளை டெல்லியில் இருந்து சென்னை திரும்பி வருகிறார்.