சென்னை: அரசு போக்குவரத்துக் கழகத்தில் முதற்கட்டமாக 750 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 625 பணியிடங்களும், கும்பகோணம் கோட்டத்தில் 125 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. புதிய பேருந்துகளை வாங்கும் வரை 15 ஆண்டுகள் பழமையான பேருந்துகளை இயக்க அனுமதி கேட்டுள்ளோம். தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 2,000 புதிய பேருந்துகள் வாங்க அரசு நிதி ஒதுக்கியுள்ளது என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.