Sunday, September 1, 2024
Home » அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பயிற்சி

அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பயிற்சி

by Suresh

திருவள்ளூர்: திருவள்ளூரில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, இன்டக்ஸ் ஆக்‌ஷன் அறக்கட்டளை மற்றும் ஐஆர்சிடிஎஸ் நிறுவனம் இணைந்து தன்னார்வலர்களுக்கான பயிற்சி மற்றும் சமூகம் 3.5 சதவீதம் என்ற கருத்தரங்கு நடத்தியது. கருத்தரங்கிற்கு இன்டக்ஸ் ஆக்‌ஷன் அறக்கட்டளையின் நிர்வாகி அர்ச்சனா கண்ணன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் ஸ்ரேயஸ் ஆதித்யா வரவேற்றார். ஐஆர்சிடிஎஸ் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் ஸ்டீபன் முன்னிலை வகித்தார்.

இந்தக் கருத்தரங்கில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சீனிவாசன், கிராமங்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் தன்னார்வலர்களை பாராட்டி நினைவு பரிசுகளை வழங்கி பேசினார். அப்போது, அரசால் ஏழை, எளிய மக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பழங்குடியினர் ஆகியோர் பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனவே அரசு திட்டங்கள் குறித்தும், எந்த துறையை அணுகி பயன்பெறலாம் என்பது குறித்தும் தன்னார்வலர்கள் போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். இதில் அறக்கட்டளையின் நிர்வாகி மில்லி மேரியா தாமஸ், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பிரித்தா, ராஜலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

17 − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi