சென்னை: சென்னை வேளச்சேரியில் பள்ளத்தில் உள்ள நீரில் மூழ்கி இறந்த இருவரின் குடும்பங்களுக்கு அரசு நிதியுதவி வழங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவைஏற்று உயிரிழந்த நரேஷின் குடும்பத்திற்கு ரூ. 16.85 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. விபத்தில் இறந்த ஜெயசீலன் குடும்பத்திற்கு ரூ. 15.49 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.