திருச்சி: மலேசியாவிலிருந்து திருச்சிக்கு நேற்றுமுன்தினம் இரவு ஏர்ஏசியா விமானம் வந்தது. அதில் வந்து இறங்கிய பயணிகளையும், அவர்களது உடமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 3 பயணிகளை சோதனையிட்டதில் கேப்சூல்ஸ் போன்ற உருண்டையான நெகிழி உறைகளுக்குள் பசைவடிவிலான ரூ.1.85 கோடி தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.