Monday, June 17, 2024
Home » தங்கம் விலை 3 நாளில் சவரனுக்கு ரூ.1,464 உயர்ந்தது

தங்கம் விலை 3 நாளில் சவரனுக்கு ரூ.1,464 உயர்ந்தது

by Karthik Yash

சென்னை: தங்கம் விலை ஜெட் வேகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாளில் மட்டும் சவரன் ரூ.1,464 ஆக உயர்ந்துள்ளது. தொடர் விலையேற்றம் நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தங்கம் விலை கடந்த 2 மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 9ம் தேதி சவரன் ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.42,920க்கும், 10ம் தேதி சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ஒரு சவரன் ரூ.43,040க்கும் விற்கப்பட்டது. 12ம் தேதி தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது. அன்றைய தினம் சவரனுக்கு ரூ.464 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,440க்கு விற்கப்பட்டது.

நேற்று முன்தினமும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,510க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,080க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,555க்கும், சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,440க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் தொடர்ந்து 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து சவரனுக்கு ரூ.1,464 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதே நேரத்தில் தீபாவளி நெருங்கும் நேரத்தில் விலை உயர்வு நகை வாங்குவோரை கலக்கமடைய செய்துள்ளது.

You may also like

Leave a Comment

15 − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi