சென்னை: சென்னையில் இருந்து கடப்பா சென்ற நகை பட்டறை ஊழியர் 230 கிராம் தங்க கட்டிகளுடன் தலைமறைவாகியுள்ளார். சவுகார்பேட்டையில் பிரதாப் என்பவரின் நகை பட்டறையில் 10 ஆண்டுகளாக ஆனந்த் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். 23-ம் தேதி ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள நகை கடைக்கு வழங்க 250 கிராம் தங்க சங்கிலியை ஆனந்த் எடுத்துச் சென்றார். தங்க கட்டிகளை வாங்கிய ஆனந்த் சென்னை திரும்பவில்லை என்று சவுகார்பேட்டை போலீசில் பிரதாப் புகார் அளித்துள்ளார்.