சென்னை: உலக முதலீட்டாளர் மாநாட்டில் 174 MSME நிறுவனங்களிடம் 50.70 லட்சம் டாலருக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 73 புதிய முதல்முறை ஏற்றுமதியாளர்களிடம் இருந்து கொள்முதல் என அமைச்சர் தா.மே.அன்பரசன் தகவல் தெரிவித்துள்ளார். ஸ்டார்ட் அப் வரிசையில் கடைசியில் இருந்த தமிழ்நாடு அரசின் முயற்சியால் 3ம் இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். 21 எஸ்சி/எஸ்டி தொழில்முனைவோர் உட்பட 153 ஸ்டார்ட் அப்களுக்கு ரூ. 42.05 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.