திருவனந்தபுரம்:கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள கிழக்கோத்து பகுதியை சேர்ந்தவர் அப்துல் லத்தீப் (42). அந்த பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சென்று பலாத்காரம் செய்து வந்து உள்ளார். 16ம் வயது முதல் 5 ஆண்டுகளாக சிறுமியை லத்தீப் பலாத்காரம் செய்து வந்தார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோருக்கு சமீபத்தில் தான் தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த பெண்ணின் பெற்றோர் சம்பவம் தொடர்பாக கொடுவள்ளி போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து அப்துல் லத்தீப்பை கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு போலீசார் அவரை தாமரசேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.