Thursday, May 16, 2024
Home » கூட்டு பலாத்காரம் செய்து பெண் படுகொலை: 3 பேர் கைது

கூட்டு பலாத்காரம் செய்து பெண் படுகொலை: 3 பேர் கைது

by Dhanush Kumar

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே, பெண் மர்மச்சாவில் திடீர் திருப்பமாக, அவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக 17 வயது சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் குண்டியல்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானசேகர். இவர் 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி அம்பிகா (40). இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். கடந்த 5ம் தேதி காலை, வீட்டின் அருகே உள்ள பூமாலைகோடு என்ற இடத்தில், புடவையால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் அம்பிகா இறந்து கிடந்தார். இது குறித்து பர்கூர் போலீசார், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அம்பிகாவின் செல்போனில் உள்ள அழைப்புகளை வைத்து, திருப்பத்தூர் மாவட்டம் பந்தாரப்பள்ளியைச் சேர்ந்த ஏழுமலை (24) என்பவரிடம் நடத்திய விசாரணையில், தனது 2 நண்பர்களுடன் சேர்ந்து அம்பிகாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. கொலையுண்ட அம்பிகாவிற்கும், ஏழுமலைக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, அவர்களுக்கு இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அம்பிகாவை கொலை செய்ய ஏழுமலை திட்டமிட்டுள்ளார். அதன்படி, கடந்த 4ம் தேதி இரவு அம்பிகாவை பார்க்க வந்த ஏழுமலை, அவருக்கு போன் செய்து உல்லாசமாக இருப்பதற்காக வெளியே வரும்படி அழைத்துள்ளார். அதை நம்பி வீட்டில் இருந்து வந்த அம்பிகாவை, ஏழுமலை மற்றும் அவரது நண்பர்களான நாட்றம்பள்ளியைச் சேர்ந்த கோவிந்தசாமி(23), பந்தாரப்பள்ளியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், அவரது புடவையாலேயே கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தப்பியோடியது தெரியவந்தது. இதையடுத்து, மூன்று பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். இது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

four − four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi