கந்தர்வகோட்டை : கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி வேண்டுகோளுக்கிணங்க புதுநகர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் மணிமாறன் உத்தரவின்படி சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார் வழிகாட்டுதலின் பேரில் சுகாதார தூய்மை பணியாளர்கள் பள்ளி வளாகம் முழுவதும் பிளீஸ்சிங் பவுடர் தூவி, கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
தலைமை ஆசிரியை கூறுகையில், மாணவ- மாணவிகளின் கல்வி எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவு அவர்களது ஆரோக்கியம் முக்கியம். உலக மலேரியா தினத்தை முன்னிட்டு கொசுவை ஒழிக்க வேண்டும். தண்ணீரை நன்றாக காய்ச்சி ஆற வைத்து குடிக்க வேண்டும். தண்ணீர் சேகரித்து வைத்துள்ள பாத்திரங்களை கொசு அண்டாத வகையில் மூடி பாதுகாக்க வேண்டும் என்றார்.