சென்னை: ரூ.4620 கோடி மோசடி வழக்கில் ஹிஜாவு நிதிநிறுவன முக்கிய நிர்வாகி கலைச்செல்விக்கு ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய ஹிஜாவு நிறுவனம் 15% வட்டி தருவதாகக் கூறி மோசடி செய்துள்ளது. பொதுமக்களிடம் சுமார் ரூ.4620 கோடி முதலீடுகள் பெற்று மோசடி செய்த வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.