Saturday, May 18, 2024
Home » தாய்லாந்து முன்னாள் பிரதமர் ஷினவத்ரா பரோலில் விடுதலை

தாய்லாந்து முன்னாள் பிரதமர் ஷினவத்ரா பரோலில் விடுதலை

by Dhanush Kumar

பாங்காக்: தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா நேற்று பரோலில் விடுதலை செய்யப்பட்டார். தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமரான தக்சின் ஷினவத்ரா (74) ஊழல் வழக்குகளில் சிக்கியதால் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.சிறை தண்டனையில் இருந்து தப்புவதற்காக 15 ஆண்டுகள் வெளிநாட்டில் தலைமறைவானார். கடந்த ஆண்டு அவர் நாடு திரும்பினார். ஆகஸ்ட் மாதம் அவருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதன்பின் உடல்நலக் குறைவு காரணமாக சிறையிலிருந்து மருத்துவமனை காவலில் வைக்கப்பட்டார். உடல் நல குறைபாடுகளை காரணம் காட்டி சிறைத் தண்டனையை ஓராண்டாக குறைத்து மன்னர் வஜிரலோங்கோர்ன் சமீபத்தில் உத்தரவிட்டார். இந்நிலையில் 6 மாதம் மருத்துவமனையில் இருந்த தக்சின் நேற்று பரோலில் விடுவிக்கப்பட்டார்.

 

You may also like

Leave a Comment

thirteen + three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi