விழுப்புரம்: முதலமைச்சர் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். விழுப்புரத்தில் கடந்த ஜூன் மாதம் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் பற்றி சி.வி.சண்முகம் அவதூறாக பேசியதாக புகார் எழுந்துள்ளது. அரசு வழக்கறிஞர் சுப்பிரமணியன் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.