போளூர்: போளூர் தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ அ.ராஜேந்திரன் (85) நேற்று காலை மரணமடைந்தார். இவர், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக அவை தலைவராகவும், தலைமை செயற்குழு உறுப்பினராகவும், ஒன்றிய செயலாளராகவும் நீண்ட காலம் கட்சி பணியாற்றியவர். மறைந்த முதல்வர் கலைஞருக்கு மிகவும் நெருக்கமானவர்களில் ஒருவர். இதன் காரணமாக 4 முறை திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு 1989, 1996 ஆகிய 2 தேர்தல்களில் வெற்றி பெற்றார். தொகுதி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். மறைந்த ராஜேந்திரனின் உடல் போளூர் அடுத்த தச்சாம்பாடி கிராமத்தில் நேற்று மாலை அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதில் அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி உட்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.