Friday, May 17, 2024
Home » இன்ஸ்டாகிராம் காதலனை மணந்த சிறுமி தற்கொலை: ஒருதலை காதலன் டார்ச்சரால் விபரீதம்

இன்ஸ்டாகிராம் காதலனை மணந்த சிறுமி தற்கொலை: ஒருதலை காதலன் டார்ச்சரால் விபரீதம்

by Karthik Yash

சேலம்: சேலம் களரம்பட்டியை சேர்ந்தவர் சிறுமி. இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் மதுரையை சேர்ந்த கவுதம் (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து கடந்த ஜனவரி 1ம் தேதி மதுரையில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் சேலம் வந்து வசித்து வந்தனர். கவுதம் கூலி வேலைக்கு சென்று வருகிறார். அச்சிறுமியை தாசநாயக்கன்பட்டியை சேர்ந்த ஸ்ரீதரன் (22) ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிறுமியின் வீட்டுக்கு சென்று அவருக்கு லவ் டார்ச்சர் கொடுத்துள்ளார். அப்போது சிறுமி, எனக்கு திருமணமாகி விட்டது. என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என கூறியுள்ளார். ஆனால் தொடர்ந்து தகராறு செய்யவே அக்கம் பக்கத்தினர் வந்து தட்டிக்கேட்டனர். இதனால் ஸ்ரீதரன் சென்றுவிட்டார். இந்த சம்பவத்தால் மனமுடைந்த சிறுமி இரவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிச்சிபாளையம் போலீசார் வழக்கு பதிந்து சிறுமியை மணந்த கவுதமிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்ரீதரனையும் தேடி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

5 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi