சென்னை: சுய உதவிக்குழு திட்டம் இன்று நாடு முழுவதும் மாபெரும் இயக்கமாக தழைத்துள்ளது. 2023-24ம் ஆண்டில், இதுவரை 3.20 லட்சம் ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த பெண்களை உறுப்பினர்களாக கொண்டு 27,539 புதிய சுயஉதவி குழு வங்கி கடன் இணைப்பு திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் சுய உதவி குழுக்களுக்கு ரூ.30,000 கோடி அளவிற்கு வங்கி கடன் வழங்கிட அரசால் உயர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை சுயஉதவி குழுக்களுக்கு ரூ.24,926 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த இலக்கு முழுமையாக எய்தப்படும் என்று ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது.