மும்பை: தொழிலதிபர் அனில் அம்பானி மற்றும் அவரது மனைவி டீனா மீது அந்நிய செலாவணி முறைகேடு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதற்காக, அனில் அம்பானி மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்நிலையில், அனில் அம்பானியின் மனைவி டீனா நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் நேரில் ஆஜரானார். அப்போது அவரது வாக்குமூலத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் பதிவு செய்தனர்.