விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் மேட்டுக்காட்டில் வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் கடந்த ஏப்.6ம் தேதி முதல் 2ம் கட்ட அகழாய்வு பணி தொடங்கி நடந்து வருகிறது. நேற்று நடந்த அகழாய்வில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சுடுமண் காதணி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட அகழாய்வில் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.