விருதுநகர்: சாத்தூர் அருகே ராமுத்தேவன்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் குழு அமைத்து விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான குழு விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். மனிதத் தவறின் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆய்வுக்குப் பின் விருதுநகர் ஆட்சியர் கூறினார்.