சென்னை: பணியிடங்களில் பாலியல் தொந்தரவில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டப்படி புகார் குழுக்கள் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. பஞ்சாலைகள், டெக்ஸ்டைல், ஸ்பின்னிங் மில்களில் பெண்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளாகி வருவதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஈரோட்டைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு, உயர்நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் குழுக்கள் அமைக்கப்பட்டதை உறுதி செய்யக் கோரிய வழக்கு மார்ச் 22-க்கு ஒத்திவைக்கப்பட்டது.