புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மரில் தினமும் ஆயிரக்கணக்கான வெளிப்புற நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். உள்நோயாளிகளாக தமிழகம் உட்பட வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சிகிச்சை பெறுகின்றனர். இங்குள்ள ஒரு வார்டில் மின்கசிவு காரணமாக திடீரென நேற்று காலை தீப்பற்றியது. பதற்றமடைந்த நோயாளிகள் அந்த அறையை விட்டு அலறியடி வெளியேறினர். தகவல் அறிந்த ஜிப்மர் பணியாளர்கள், எலக்ட்ரீசியன்கள் வந்து தீயை அணைத்தனர். இதனால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.