தொண்டி: ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே காரங்காடு கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் ஜான் பிரிட்டோ (50), குணசேகரன் (62), ஆரோக்கியதாஸ் (57) மற்றும் ஆண்ட்ரஸ் (40) ஆகியோர், நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் கடலுக்குள் மீன் பிடிக்க நாட்டுப்படகில் சென்றனர். இதில், ஜான் பிரிட்டோ படகை இயக்கிக் கொண்டிருக்கும்போது திடீரென தவறி விழுந்து விட்டார். சக மீனவர்கள் கடலில் குதித்து தேடியபோது அவரது உடலையே மீட்க முடிந்தது.
கடலில் தவறி விழுந்து மீனவர் சாவு
previous post