மதுரை: பொய் செய்தி பரப்பியதாக கைது செய்யப்பட்ட பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் குறித்து உண்மைக்கு புறம்பான தகவலை வெளியிட்ட புகாரில் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டார். சென்னையில் கைது செய்யப்பட்ட எஸ்.ஜி.சூர்யாவை, மதுரை விரைவு நீதிமன்றத்தில் போலீஸ் ஆஜர்படுத்தியது.