தாராஷிவ்: மகாராஷ்டிர மாநிலம் தாராஷிவ் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, “பாஜ அரசை எதிர்கொள்ள முடியாதவர்கள் தற்போது எங்களை பற்றி சமூக ஊடகங்களில் போலியான காணொலிகளை பரப்பி வருகின்றனர். எங்களை பற்றி எதிர்க்கட்சிகள் சொல்லி வந்த பொய்கள் வேலை செய்யவில்லை என்பதால், தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி அன்பின் கடையில் பொய்களை விற்பனை செய்கிறார்கள்” என்று குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய மோடி, “தற்போது நடக்கும் தேர்தல் நாட்டின் சுயமரியாதை தொடர்பானது. எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழக்கூடிய பலவீனமான அரசால் வலிமையான தேசத்தை உருவாக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.