மும்பை : மும்பையின் தஹிசார் பகுதியில் ஃபேஸ்புக் லைவில் பேசிக் கொண்டிருந்த சிவசேனா உத்தவ் தாக்கரே தரப்பைச் சேர்ந்த நிர்வாகி அபிஷேக் கோசல்கர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்பகை காரணமாக அபிஷேக்கை கொலை செய்த அரசியல் செயல்பாட்டாளர் மாரிஸ் நொரோன்ஹா, தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.