பெண்களுக்கு அகன்ற விழிகள் இருப்பது கூடுதல் அழகு தரும். கண்களின் அடி இமைப்பகுதியில் சற்று கெட்டியாக மையைத் தீட்டிக் கொண்டால் விழிகள் அகன்று இருப்பது போன்று தோற்றமளிக்கும்.
சுருள் சுருளாகக் கூந்தல் இருந்தால்…
கூந்தல் சுருள் சுருளாக அமைந்திருக்கக் கூடிய பெண்கள் பின்னல் போட்டுக் கொண்டால் முனையை அப்படியே விட்டுவிட வேண்டும். அது அவர்களுக்கு அழகை அதிகரித்து காட்டும்.
எழில் தரும் முகப் பவுடர்கள்…
முக அழகிற்காக உபயோகிக்கும் பவுடரை ஒரே பவுடர் பயன்படுத்துவதை விட்டு இரண்டு மூன்று வகை பவுடர்களை மாற்றி மாற்றிப் பயன்படுத்தினால் நன்று. ஒன்றுடன் ஒன்றை கலந்து பூசிக் கொண்டால் அழகும், நறுமணமும் கூடும். மேலும் சருமமும் அனைத்துவிதமான காஸ்மெட்டிக் மற்றும் காலநிலைகளுக்கு பழக்கப்படும்.
பளபளப்புடன் திகழ….
பெண்கள் சீரான சரும நிறத்திலும், சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் ஆக வேண்டுமெனில் தேங்காய் எண்ணெயை உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் வைத்திருந்து பயத்தம் பருப்பு மாவை தேய்த்துக் குளித்து வந்தால் உடல் பளபளப்பாகவும், சீரான நிறத்துடனும் திகழலாம்.
முகம் மினுமினுப்புடன் இருக்க…
ஆப்பிள் பழத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு மத்து கொண்டு கடைந்து மாவு போன்று ஆனவுடன் சுத்தமான பாலேட்டைக் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் வைத்திருந்து முகத்தை கழுவி விட வேண்டும். இதே போல் சில நாட்கள் தொடர்ந்து செய்துவர முகம் நல்ல மினுமினுப்புடன் கவர்ச்சியாக தோன்றும்.
– காகை
ஜெ. ரவிக்குமார்